Wednesday, March 31, 2010

ORIGINAL தூக்க மாத்திரை PLS?????

எனக்கு இப்போ வரும் கோவத்துக்கு தூக்க மாத்திரைய சாப்புட்டு கொஞ்ச நேரமாவது நிம்மதியா எல்லா எழவையும் மறந்துட்டு தூங்கனும் போல இருக்குங்க.... அது கூட எந்த கடைல வாங்கினா ஒரிஜினலா மாத்திரை கிடைக்கும்னு தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்கப்பா..... :-(((

ஏன் இந்த கொல வெறின்னு புருவத்த தூக்கிட்டு கேட்குற எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்குறேன்... உங்களுக்கும் இந்த உண்மைகளெல்லாம் தெரிஞ்சப்புரம்... எட்றா அருவாள... கட்டுறா வண்டியனு சொல்வீங்க... இல்ல என்ன மாதுரி புலம்புவீங்க...ஏனா நாம எல்லாம் அநியாயத்தை பாத்து பொங்கி எழும் சூடான சேம் ப்ளட்டு...

போன பதிவுல இயற்கையின் அருட்கொடைகள் பல பிரச்சனைக்கு தீர்வா இருக்குனு முடிவுரை சொல்லி என்னோட பதிவ முடிச்சேன்... அதுக்கப்புறம் இப்போ நான் கண்ட காட்சிகள் அதிர்ச்சி தரும் பல தகல்வல்கள பாத்து மனசு பத பதைக்க உங்க கிட்ட மறுபடி ஓடோடி வந்துருக்கேன் காரணம் பாலு விஷமாகுதாம், பயிறு விஷமாகுதாம், விளைச்சல் நிலம் மலடாகுதாம்,அப்புடியே விளைவிச்சாலும் அத சாப்பிடும் மனித இனம் மலடாகுதாம் இப்புடி எதை எடுத்தாலும் விஷம்னா என்னத்த தான் துன்னுறது....

இந்த பதிவும் வழக்கம் போல நம்ம இயற்கைய பத்தி அமைந்தது எதேச்சையாக தான்.... இப்புடியே போய்ட்டு இருந்தா நானும் இயற்கை ஆர்வலராகி அப்புறம் தீவிரவாதியா ஆய்டுவேணு நினைக்கிறேன்.... தீவிரவாதினா இயற்கைய வளங்களை காக்கும் பணியில் தீவிர வாதிப்பா எக்குத்தப்பா புரிஞ்சுகிட்டு என்கவுண்டர் வர இழுத்து விட்டுறாதீங்க பங்காளிங்களா.... எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்...

நம் முன்னோர்கள் இயற்கையோட ஒன்றிய வாழ்கை நெறியை கடைபுடிச்சதாலும்... இயற்கை வளங்களுக்கு பாதிப்பில்லாத அழகான வாழ்கை முறையை அமைத்து கொண்டதாலும் ரொம்ப காலம் ஆரோகியமா வாழ்ந்தாங்க.... ஆனா அதுலாம் இப்போ STD(history) ஆகிபோச்சு.... வளரும் நம் குழந்தைங்க கிட்ட உங்க பாட்டி 100 வருஷம் வாழ்ந்தாங்கனு சொன்னா இதென்ன சக்திமான் பார்ட் 10 னு கேப்பாங்க போல...


அப்போ
இருந்த விளை நிலங்கள் இப்போ நாம வசிக்கும் அடுக்கு மாடிகுடியிருப்புகளாகி... அப்போ இருந்த நிதான உலகம் இப்போ அவசர உலகமாக மாறிப்போய்.... instant நூடுல்ஸ் மாதுரி இப்போ instant அரிசி கண்டு புடிக்கும் அளவுக்கு இழுத்துகிட்டு வந்துருக்கு.... அட ஆமாங்க இனிமே சோறு உன்ன அடுப்பே தேவை இல்லையாம்.... தண்ணில அரிசிய போட்டா சோறு ரெடி... (அப்போ ஆனம்னு (குழம்புன்னு) ஆர்வமா கேக்கும் மக்களுக்கு... கடைல வாங்கிக்கொள்ளவாம்... எப்புடி எல்லாம் சோம்பேரியாக்குரானுகப்பா ....)



போற போக்க பாத்தா பத்து மாசம் சுமந்து பெற்றெடுக்கும் குழந்தை செல்வங்களை கூட instantaa பெத்துபாங்க போல... இப்போவும் instant குழந்தைங்க பொறக்குது அது instant messengerla.... நிஜத்தில் பெற்றடுக்கும் காலம் ரொம்ப தொலைவில்இல்லைங்குறது வேதனையான விபரீதம்... இப்புடி வேகம் வேகம்னு எல்லாத்துலையும் வேகத்த கூட்டி கடைசில என்னாச்சு தெரியுமா.... இதுக்கு மேலநான் பேசினா சரியா வராது.... நீங்களே பாத்து நொந்துக்கோங்க....













நிலைமை இப்புடி இருந்தா வருங்காலத்துல formality க்கு கூட first night பால் வைக்க மாட்டாங்க போல.... ஹ்ம்ம்... ஏன் கவலை எனக்கு :-(((.... என்னத்தசொல்ல...

Videos Courtesy: Techsatish.net

விருதின் விளைவு

நானும் கைய கட்டிட்டு அப்டியே வேடிக்க பாத்துட்டு காலத்த ஓட்டலாம்னு பாத்தா ஜலீலா அக்கா அவர்கள் உடமாட்டேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு விருத ஒன்னு குடுத்து உசுப்பேத்தி விட்டாங்க.... இது வர போட்ட பதிவுகள் எப்படி இருந்துச்சோ தெரில... ஆனா இனிமே வரும் பதிவுகள் சுவாரசியமா எதாச்சும் உருப்படியா சொல்லணும்னு சொல்லியே அந்த விருத குடுத்தாங்க.... அதான் ஒரு சில நல்ல மேட்டரோட இதோ வந்துட்டோம்ல.....

சரி விஷயத்துக்கு வருவோமா...


சில பேருக்கு சில விஷயம் புடிக்காது... அதுபோன்றவர்கள் கிட்ட டீல் பண்றபோ அவங்களுக்கு ஏத்த மாதுரி அவங்க பேச்சில் தெரியும் விருப்பு வெறுப்புகளை வைத்து manage பண்ணிருவோம்... ஆனா இந்த கான்சப்ட எப்புடி எறும்புக்கு அப்ளை பண்றதுன்னு ரூம் pottu யோசிச்ச பிறகு... என்னங்க அப்புடி ஒரு லுக்கு... சரி சரி விஷயத்துக்கு வரேன்.... அதாவதுங்க எந்த பயபுள்ள ஏறும்புகிட்ட போயி பேச்சுவார்த்த நடத்துச்சோ தெரில..... எறும்புக்கு வெள்ளரிக்காய் விதைனா ஆகாதாம்... ஆகவே.. எறும்பு தொல்லையினால் அவதிப்படும் மக்களே.... எங்க எறும்பு இருக்கோ அங்க வெள்ளரி விதைகள போட்டு வெச்சா... எறும்பு குடும்பத்தோட எஸ்கேப் ஆய்டுமாம்... கெமிகல் உள்ள எறும்பு பொடிக்கு இது ஆரோக்கியமான ஒன்னு தானே... உபயோகிச்சப்புரம் காசு குடுத்தா போதும்.... ஹி ஹி....

(ஆனா இதுக்குலாம் கம்பெனி கேரண்டீ இல்ல இப்போவே சொல்லிட்டேன்)

கோடைகாலம் தொடங்கிடுச்சு.... பெரும்பாலான வீடுகளில் அதுவர பயன் படுத்தாத ஐஸ் ட்ரேய உபயோக படுத்த தொடங்கிருப்பீங்க.... பொதுவா நம்ம வீட்டுக்கு வருபவர்களுக்கு ஐஸ் வாட்டர் குடுக்க ஐஸ் கியூப்ஸ் எடுத்து க்ளாஸ்ல உள்ள தண்ணீர்ல போட்டு குடுத்தா வெள்ளையா ஏதோ மிதக்கும்... குடிக்கபோரவங்க கைல வாங்கிட்டு ஏதோ நாம ஒழுங்கா கிலாச கழுவாம ஊத்தி குடுத்த மாதுரி ஒரு லுக் விடுவாங்க... உங்களுக்கு சுத்தமான ஐஸ் வேணும்னா ஐஸ் வைப்பதற்கு முன்னாடி தண்ணிய கொதிக்க வெச்சுட்டு... கொதிக்கவச்ச தண்ணீர்ல ஐஸ் போட்டா இந்த பிரச்சனை வராதாம்...

அடுத்து வாஷ் பேசினுக்கு மேல இருக்குற கண்ணாடி இருக்கு பாருங்க..... அது ஒரு பெரிய கவுருவ பிரச்சன எல்லார் வீட்லயும்... சில வீடுகளில் அங்க நின்னு பிரஷ் பண்ணும்போது தெறிச்ச நுரை அப்டியே புள்ளி புள்ளியா போயி பாக்கவே ஒரு மாதுரி இருக்கும்.... திடீர் விருந்தாளிங்க யாராவதும் கை கழுவ போனா நமக்கே சங்கட்டமா இருக்கும்... இதுக்கு ஒரே தீர்வு.... ஸ்பிரிட்... ஸ்பிரிட்... ஸ்பிரிட்.... ஆமா இத போட்டு சுத்தம் செய்யணுமாம்... அதுக்கப்பறம் பாருங்க அப்டியே கண்ணாடி சும்மா டால் அடிக்குமாம்... அப்பறம் என்ன வீட்ட கண்ணாடி மாதுரி வெச்சுருக்கீங்கனு எல்லாரும் அவார்ட் குடுத்துட்டு போவாங்க...
(குடுக்கலேனா என்ன கேக்கப்புடாது ஹ ஹ )


இன்னொரு முக்கியமான பிரச்சன ச்சிவிங்கம்... பயபுள்ளைங்களுக்கு போனா போதேனு அத வாங்கி குடுத்தா... மென்னுட்டு சில நேரம் உக்கார எடமா பாத்து கரெக்டா துப்பி வெச்சு... அதுல நாம உக்காந்து... நாம ஆச ஆசையா வெச்சுருந்த துணில அது ஒட்டி... இப்டி ஆய்டுச்சேன்னு அப்புடியே சும்மா உச்சில சுர்ருங்கும்... இனிமே நோ டென்சன்... ச்சிவிங்கம் பட்ட துணிய freezerla ஒரு ஒன் hour வெக்கணுமாம்... அப்பறம் பாருங்க....
(கறி, கோழி ,மீனுலாம் வைக்கும் வீடுகளில் என்ன செய்யனும்னு தெரியல...)

அப்பறம் வெள்ளை துணி சும்மா வெள்ள வெளேர்னு இருக்க துணி ஊற வைக்கும்போது ஒரு துண்டு எழுமிச்சையை வெட்டி போட்டு வைக்கணுமாம்... அப்பறம் பாருங்க... விளம்பர பட டையலாக்க எழுதி குடுக்காமலே பேசுவாங்க எல்லாரும் உங்கள பாத்து....



முடி பள பளன்னு இருக்கணும்னா ஒரு ஸ்பூன் வினிகர் முடில தேச்சு அப்பறம் வாஷ் பண்ணனுமாம்.....









இந்த கோடை காலத்துக்கு ஜூஸ் அதிகமா தேவைப்படும்.... இதுவர நீங்க வாங்கின அதே அளவு எழுமிச்சைல அதிக ஜூஸ் கிடைச்சா வேணான்னு சொல்லுவீங்க... ஜூஸ் புளிவதர்க்கு ஒரு மணி நேரம் முன்னாடி சுடு தண்ணீர்ல எலுமிச்சைய ஊற போட்டு அப்பறம் புளிஞ்சா.... அதிக ஜூஸ் கிடைக்குமாம்... எப்பூடி....?????



மீன் சாப்பாடு சாப்புடறவங்க என்ன தான் மாங்கு மாங்குன்னு எத போட்டு கழுவினாலும் மீன் வாசன கையை விட்டு அவ்வளவு சீக்கிரம் போகாது... அதுக்கு ஒரே சிறந்த தீர்வு.. ஆப்பிள் விநிகராம்... கொஞ்சூண்டு போட்டு கழுவினாலே போதுமாம்.... ட்ரை பண்ணி தான் பாப்போமே....




நம் இல்லத்தரசிகள் எல்லாருக்கும் தினம் தினம் ஒரே கண்ணீர் தான்... அட சமைக்கும்போதுதாங்க சொல்றேன்... காரணம் வெங்காயம்.... சோ.. இனிமே உங்க கண்ணுலேந்து ஒரு சொட்டு கண்ணீர் வருவதை இந்த அன்புத்தோழன் அனுமதிக்க மாட்டான் ஹி ஹி... ஆகவே எப்போலாம் வெங்காயம் வெட்டுகிறீர்களோ அப்போலாம் சிவிங்கம் மென்னுகிட்டே வெட்டி தள்ளலாம்... நோ கண்ணீர்.....


அவசரத்துக்கு முட்டை அவிக்க நினைக்கிறவங்க நீங்க வேக வைக்க போற தண்ணீர்ல கொஞ்சம் உப்பு சேத்துக்கிட்டா போதுமாம்.... இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மாதுரி..... இன்ஸ்டன்ட் முட்டை ரெடி... இதெப்புடி இருக்கு... :-)





சட்டைல இன்க் பட்டுருச்சுனு வருத்தப்படும் வாலிபர் சங்கத்துக்கு... இனிமே கவலைய விடுங்க... இருக்கவே இருக்கு பல் துளக்குற பேஸ்டு... இன்க் பட்ட எடத்துல பேஸ்ட் போட்டு அத காய விட்டு பிறகு துவைச்சா சரி ஆய்டுமாம்..... ஆனா பயபுள்ள பேஸ்டு ப்ராண்ட சொல்லாம விட்டானுங்க பங்காளிங்களா... எதுக்கும் கொஞ்சம் உஷாராவே ட்ரை பண்ணுங்க ...


அடுத்து நம்ம இல்லத்தரசிங்களுக்கு.... சக்கரவள்ளி கிழங்கு தோல் எளிதா உரிக்க... அவிச்ச பிறகு ஒடனே சில்லுனு இருக்கும் சாதா தண்ணீர்ல போட்டா சுலபமா உரிக்கலாமாம்.... எல்லாம் கேள்வி ஞானம் தான்... ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.... ஏதாது ஏடா கூடமாய்ட்டா ரொட்டி கட்ட எடுத்துட்டு வராம இருந்தா சரி...


கடைசியா ஒன்னு சொல்லி முடிச்சுக்குறேன்.... போன பதிவுல நம்ம ஹுஸைனம்மா சொன்னாங்க பூச்சிக்காக அடிக்கப்பட்ட மருந்துல சில பிஞ்சு உயிர்கள் அநியாயமா இறந்து போச்சுன்னு... நெஞ்சை உருக்கிய அந்த துயர சம்பவத்தை மறக்க முற்படும்போது தான்... இதை கண்டேன்... பெரும்பாலான வீடுகளில் எலித்தொல்ல சகஜமான ஒண்ணா ஆய்டுச்சு.... அத ஒழிக்க கண்ட கெமிகல் போட்ட எலி மருந்து வாங்கி வைக்கிறாங்க... சும்மா வீணா வம்ப விலை குடுத்து வாங்குற மாதுரி தாங்க இது... அதுவும் குழந்தைகள் இருக்கும் வீட்டுக்கு சொல்லவே வேணா... இதுக்கு இயற்கை தந்திருக்கும் அருமையான ஒரு விஷயம் தான்... மிளகு... கருப்பு மிளகை எங்க எல்லாம் எலி புலங்குதோ அங்கெல்லாம் போட்டு வெச்சுட்டா போதும்...... எலியின் தொல்லை இனிமே பக்கத்து வீட்டுக்காரர் பாத்துப்பார்... ஹி ஹி... முடிஞ்சா அவங்க கிட்டயும் இதை சொல்லி கெமிகல் கலந்த கண்ட எலி மருந்தின் உபயோகத்தை தவிர்க்கலாம்...

இயற்கையோடு ஒன்றிய வாழ்வினை மனிதன் ஒதுக்கும்போது தான் விபரீதங்கள் விலை கொடுத்து வாங்கப்படுகின்றன நம்மையும் அறியாமல்.... இயற்கை தந்த பற்பல அருட்கொடைகளே பெரும்பாலான பிரச்சனைகளுக்கு விடையளிக்கும்போது..... செயற்கையின் மீது நாட்டம் எதற்கு... செயற்கையான பலவற்றின் மீதுள்ள நமது நாட்டத்தை குறைத்து..... இயற்கை வளங்களை பேணி பாதுகாத்து, அவற்றை பெருக்கி வளமான வாழ்வு வாழ முற்படுவோமே....

Wednesday, March 24, 2010

மனைவியின் நேர்மை

தலைப்பை பார்த்து இப்படி ஒரு அற்புத நிகழ்வா...... உலகில் எங்கு நடந்திருக்கும் இந்த அதிசயம் என்று பார்க்க ஓடோடி வந்த மனைவிபோபியாவால் பாதிக்கப்பட்டு (ஒருசிலர் மட்டும்) தினமும் வருத்தெடுக்கப்படும் கணவன்மார்கள் அனைவரும் என்னை மன்னிக்கவும்.... ;-) ஹி ஹி....

இது உங்களுக்கான நற்ச்செய்தி ஒன்றும் இல்லை.... மாறாக உங்களை போன்று பாதிக்கப்பட்ட ஒருவனின் சோகக்கதை.... ;-))) உங்களின் மன ஆறுதலுக்காக.... (you are not the only one)...


(அய்யா
இன்னும் பேச்சளருனு இப்படி கலாய்க்றீங்களா, இருக்கட்டும் இருக்கட்டும்.... அம்மிணி வந்தப்பறம் தெர்யும்னு மனதுக்குள் சாபம் எதுவும் குடுத்து விட வேண்டாமென்று இல்லத்தரசிகளின் சங்கத்திற்கு இதன் மூலம் தாழ்மையான வேண்டுகோளை வைத்து..... ஆரம்பிக்குறேன்....)


come on start music...... :-)

A man who was driving a car with his wife was stopped by a police officer.
The following exchange took place.

The man says, "What's the problem, officer?"

Officer: "You were going at least 75km speed in a 55km zone."

Man: "No sir, I was going 65km."

Wife: "Oh, Harry. You were going 80." (The man gave his wife a dirty look.)

Officer: "I'm also going to give you a ticket for your broken taillight. "

Man: "Broken taillight? I didn't know about a broken taillight!"

Wife: "Oh Harry, you've known about that taillight for weeks." (The man gave his wife another dirty look.)

Officer: "I'm also going to give you a citation for not wearing your seat belt."

Man: "Oh, I just took it off when you were walking up to the car."

Wife: "Oh Harry, you never wear your seat belt."

The man turned to his wife and yelled, "SHUT YOUR MOUTH!"

The officer turned to the woman and asked, "Ma'am, does your husband talk to you this way all the time?"

The wife said, "No, only when he's drunk."



(டமார்ர்ர்ர்ர்ர்..... ஹி ஹி... )

என்ன ஒரு உண்மையான மனைவி பாத்தீங்களா..... :-) ஒரு வேலை அரிச்சந்திரன் பரம்பரையா இருந்திருப்பாகளோ ;-)))) இல்லே நம் சித்ரா அவர்கள் சொன்ன மாதுரி வளையல் வாங்கி தராததின் விளைவோ....?? என்ன இருந்தாலும் சொல்லுங்க.... சிறு ஊடலுக்கு பின் வரும் கூடலின் சுகமே தனி தான் இல்ல.... எபெக்ட்ஸ் எல்லாம் பலமாக இருக்குமல்லவா.....

( அட என்ன இது லுக்கு... நம்புங்கப்பா.... அனுபவமெல்லாம் இல்ல ;-).... படிப்பறிவு தான்.... :-)) ....)


யாரையும் குறைச்சு எடை போட வேணா

A Sardar is in a Quiz Contest trying to win prize money of Rs.1 crore

The questions are as follows:

1) How long was the 100 yr war?
A) 116
B) 99
C) 100
D) 150

Sardar says "I will skip this"

2) In which country are the Panama hats made?
A) BRASIL
B) CHILE
C) PANAMA
D) EQUADOR

Sardar asks for help from the University students

3) In which month do the Russians celebrate the October Revolution?
A) JANUARY
B) SEPTEMBER
C) OCTOBER
D) NOVEMBER

Sardar asks for help from general public

4) Which of these is King George VI first name?
A) EDER
B) ALBERT
C) GEORGE
D) MANOEL

Sardar asks for lucky cards

5) The Canary islands, in the Pacific Ocean, has its name based on which animal:
A) CANARY BIRD
B) KANGAROO
C) PUPPY
D) RAT

Sardar gives up...

If u think you are indeed clever and laughed at our Sardar's replies, then please check the answers below:


1) The 100 year war lasted 116 years from 1337-1453
2) The Panama hat is made in Equador
3) The October revolution is celebrated in November
4) King George's first name was Albert. In 1936 he changed his name
5) Puppy. The Latin name is INSULARIA CANARIA which means islands of the puppies.


Now tell me who's the dumb one....!!! ;-)

Don't ever laugh at a Sardar again!! :-))))

Sunday, March 7, 2010

படித்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன்

இருந்திருக்கலாம் முதிர்கன்னியாகவே!!!!
புகைப்படத்துடன் வந்து
பிடித்திருக்கா என்றாள் என் அம்மா!

அசைக்காத தலையை
சம்மதம் என்றே பிடிங்கி சென்றாள் புகைப்படத்தை!!

நீயும் வந்தாய் அவசர விடுப்பில்;
கண் இமைக்கும் நேரத்தில்
கல்யாணமும் முடிந்துவிட்டது!!

முழுதாய் புரிவதற்க்குள்
முடிந்து விட்டது உன் விடுப்பு!

எடுத்து சென்றாய் என் இதயத்தை
கூடவே கொடுத்து சென்றாய் குழந்தையை!!

பத்தே நாட்களின் வாழ்க்கை
பறித்துக்கொண்டது பாழாய்ப்போன வெளி நாடு!!

பழக்கமே இல்லாத உன் உறவுகளுடன்
பலிகடாயாய் நான்!
என் அழுகை கூட

ஐந்து விரல்களுக்கு நடுவே!

வறண்டுப் போன கண்களும்
இறுண்டுப் போன இதயமுமாக நானிருக்க;
ஆறுதல் என வந்தவர்களெல்லாம்
வசைப் பாடிவிட்டே சென்றார்கள்!
அயல் நாட்டில் இருப்பதெல்லாம்
உழைப்பதெல்லாம் உனக்குதானே என்று!!

கெஞ்சினேன் கொஞ்சினேன்
வந்துவிடுங்கள் என் பிரசவத்திற்க்கு;
ஆனால் அனுப்பினாய் குழந்தைக்கு பெயரை மட்டும்!!

துக்கம் தொண்டையை அடைக்க;
உறுண்டு வந்த கண்ணீரையும்
ஒரமாய் துடைத்துவிட்டு ;

உள்ளுக்குள்ளே உள்ளத்திலே
உரைத்தேன் - இருந்திருக்கலாம்
முதிர்கன்னியாகவே!!!!

நன்றி சகோதரர் Mohamed Riyaz:facebook

courtesy: http://nagoreflash.blogspot.com/2010/02/blog-post_26.html#comment-form