Wednesday, June 16, 2010

செய்தி தெரியுமா!?!?!??!?


உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான். அமெரிக்காவின் முயற்சியால் கண்டறியப்பட்டுள்ள இதன் மதிப்பு மட்டும் 1 ட்ரில்லியன் டாலர்கள் என முதல் நிலைத் தகவல்கள் கூறுகின்றன. முழுமையான விவரங்கள் வந்தால் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை நிமிர்த்தும் பெரும் புதையல் இது என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள்.

இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் 'ஸ்மெல் பண்ணவர்கள்' அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையான பெண்டகன் தான்.

இந்தக் கனிமங்கள் தவிர, தொழில்துறையின் அடிப்படையை உருவாக்கத் தேவையான அத்தனை தாதுக்களையும் பேரளவில் கண்டுபிடித்துள்ளனர்.
(மக்களே... இப்போ புரியுதா இந்த போர் எதுக்குன்னு... அமெரிக்கா எது பண்ணாலும் அதுல ஒரு உள்குத்து இருகுமப்பா )

இப்படியொரு தாதுப் படுகை, பெரும் பொக்கிஷம் தங்கள் நாட்டில் இருப்பதே தெரியாமல் போரிலும் மதத் தீவிரவாதத்திலும் காலத்தைக் கழித்து வந்துள்ளனர் ஆப்கன் ஆட்சியாளர்கள். இப்போதும் கூட தாதுப் புதையலின் ஒரு பகுதிதான் ஆப்கன் அரசுக்கு சொல்லப்பட்டுள்ளது. மீதி விவரங்களை அமெரிக்கா ரகசியமாக வைத்துள்ளது.

ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படுகை கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் கூட ஆப்கன் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் எங்கேயோ போய்விட்டிருக்கும்.

'இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. உலகின் மிகப் பெரிய சுரங்க மையமாக இனி ஆப்கானிஸ்தான் திகழும்' என்கிறார் ஒரு அதிகாரி. லித்தியம் கனிமத்துக்கு ஒட்டுமொத்த இருப்பிடமாகத் திகழும் அளவுக்கு ஆப்கானிஸ்தானி்ல் இருப்பு காணப்படுகிறதாம்.

இப்போது லித்தியம் உற்பத்தியில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. அதை ஜஸ்ட் லைக் தட் ஓவர்டேக் செய்துவிடும் ஆப்கானிஸ்தான் என்கிறார்கள்.

ஆனால் இந்த கனிமங்களை தோண்டி எடுக்க பெரும் முதலீடு அவசியமாக உள்ளது. தேவையான முதலீடு கிடைத்தால், அடுத்த சில வருடங்களிலேயே ஆப்கன் நாடு உலகின் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் அதிசயத்தைப் பார்க்கத்தான் போகிறீர்கள் என்கிறது அமெரிக்கா.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மத்திய பாதுகாப்பு கமாண்டர் ஜெனரல் டேவிட் எச் பெட்ரோஸ் இதுகுறித்து கூறுகையில்,

"ஆப்கானிஸ்தானில் இப்போது கண்டறிந்துள்ள தாதுக்களின் அளவு, வெரைட்டி, தரம் என்னை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. ஆனால் இதைத் தோண்டி எடுப்பது, பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் புரியாமலில்லை. ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷம் பெரிய விஷயம்.

மாபெரும் தொழிற்சாலைகள் அமைந்து, ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் தருணம் நெருங்கிவிட்டதால், ஆப்கானிஸ்தான் பற்றிய இமேஜே சட்டென்று மாறும் என்றார்.

இந்த கனிமப் புதையலில் மதிப்பு என்ன?:

அதைத் தெரிந்து கொள்ளும் முன், ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் எவ்வளவு என்று பார்க்கலாம்.

இந்த நாட்டின் பொருளாதாரம் பெருமளவு சார்ந்திருப்பது... விவசாயத்தையோ, தொழிற்சாலைகளையோ அல்ல. ஓப்பியம் மற்றும் அபின் தயாரிப்பை!

சர்வதேச அளஷவில் கொடிய போதைப் பொருள்கள் அனைத்துக்கும் தாயகமாகத் திகழ்கிறது ஆப்கானிஸ்தான். மேற்கு ஆசியாவின் போதை மருந்து முக்கோணத்தின் மையப் பகுதி ஆப்கானிஸ்தான். இன்று நேற்றல்ல...பண்டைய காலத்திலிருந்தே ஓப்பியம் தயாரிப்பது ஆப்கானிஸ்தானில் குடிசைத் தொழில் மாதிரி.

இதற்கடுத்த வருவாய் ஆதாரம், முன்பு ரஷ்ய உதவி. இப்போது அமெரிக்கா தரும் நிதியுதவி.

இப்படி சகல வழிகளிலும் ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் அளவே 12 பில்லியன்கள்தான்! அதாவது இந்த 12 பில்லியன் டாலர்தான் ஆப்கானிஸ்தானின் ஜிடிபி (gross domestic production!). ஒரு சர்வதேச நடுத்தர ஐ.டி. நிறுவனத்தின் லாபத்தின் அளவும் இதுதான்.

ஆனால், கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிமத்தின் மதிப்பு 1 ட்ரில்லியன் டாலரைத் தாண்டும் என்கிறது ஆரம்பகட்ட கணக்கு. பில்லியன் கணக்கில் சொன்னால் 1000 பில்லியன் டாலர்கள். இன்றைய தேதிக்கு இந்தியாவின் ஜிடிபியே 1.23 ட்ரில்லியன்தான்!!.

இவ்வளவு பெரிய புதையலை எப்படிப் பயன்படுத்தப் போகிறது ஆப்கானிஸ்தான் என்பதுதான் இப்போது எழுந்துள்ள 'பில்லியன் டாலர் கேள்வி'!. அல்லது இதை அமெரிக்கா எப்படி மறைமுகமாக சுருட்டப் போகிறது என்பது தான் 'ட்ரில்லியன் டாலர் கேள்வி!'.

ஆப்கானிஸ்தானில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. மீண்டும் தலிபான்கள் தலைதூக்கும் நிலை. நாட்டின் ஒரு பகுதியில் இன்னும் தலிபான்களின் ஆதிக்கம் உள்ளது. இன்னொரு பக்கம் லஞ்சமும் நிர்வாகச் சீர்கேடும் ஆப்கானிஸ்தானையே விழுங்கிவிடும் சூழல் உள்ளது.

இந்த கனிமத் தாதின் ஒரு சிறு பகுதியை வெற்றிகரமாக வெளியில் எடுத்துப் பயன்படுத்தினாலே, நாடு பெருமளவு நிமிர்ந்துவிட வாய்ப்புள்ள நிலையில், இயற்கை அளித்துள்ள இந்த நற்கொடையை எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்களோ? என கவலை தெரிவித்துள்ளனர் பொருளியலறிஞர்கள்.

இந்த தாது விஷயத்தில் அமெரிக்கா எப்படியெல்லாம் ஆப்கானிஸ்தானில் விளையாடப் போகிறது என்பதும் முக்கியமான கேள்வியாக நிற்கிறது.

ஆனால் இந்த விஷயத்தில் அமெரிக்காவும் பயப்படும் சமாச்சாரம் ஒன்று அங்கே நிகழ்ந்து வருகிறது. அதுதான் சீனாவின் எதிர்பாராத தலையீடு. இந்த இயற்கைத் தாது புதையல் விஷயத்தில் உதவிக்கு வருகிறோம் என வரிந்து கொண்டு சீனா நுழைய ஆரம்பித்துவிட்டதை அச்சத்துடனே பார்க்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள்.

ஆப்கானிஸ்தானில் தாமிர தாது தோண்டியெடுக்கும் முழு உரிமையையும் சீனாவுக்கு தாரைவார்க்க ஆப்கன் அமைச்சர் ஒருவரே 30 மில்லியன் டாலர்கள் லஞ்சம் பெற்றுள்ளார். இன்னும் அவர் அமைச்சராகவே தொடர்வதும் அதை அதிபர் அமீத் கர்ஸாய் அனுமதிப்பதும், அமெரிக்கர்கள் பயத்தை அதிகரித்துள்ளது.

ஆனால், பெரும்பகுதி கனிமங்களை கண்டுபிடித்ததே அமெரிக்காதான் என்பதால் முன்னுரிமை அவர்களுக்கே தரப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

அமெரிக்காவும் சீனாவும் இந்த கனிமங்கள் மீது ஆசைப் பார்வை பார்ப்பதைப் பார்த்தால், 'தேனெடுத்தவன் புறங்கையை நக்கிய கதையாகுமா அல்லது தேனையே எடுத்துக் கொண்டு வெறும் புறங்கையை மட்டும் ஆப்கன் மக்களுக்கு காட்டப் போகிறார்களா என்பது தெரியவில்லை.

கடந்த ஓரிரு வாரங்களில் தான் இந்த ஆப்கான் கனிம சமாச்சாரத்தை வெளியில் கசிய விட்டுள்ளது அமெரிக்கா.

'Unobtanium' என்ற கற்பனையான கனிமத்தை எடுக்க பண்டோரா கிரகத்தையே அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்து, அதன் மக்களை ஒழித்துக் கட்டும் கற்பனைக் கதையைத் தான் 'அவ்தார்' என்ற படமாக எடுத்தார் ஜேம்ஸ் கேமரூன். 3 டி சமாச்சாரம், அன்னிய கிரகவாசிகள் என்று கதை போனதால் கேமரூன் சொல்ல வந்த விஷயம் (கதையின் கரு ) பெரிதாகப் பேசப்படவில்லை.

இப்போது ஆப்கானிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிம வளம் கிட்டத்தட்ட பண்டோரா கிரக கதை மாதிரி ஆகிவிடுமோ என்ற அச்சம் இப்போதே பரவ ஆரம்பித்துவிட்டது.







REEL = REAL


Courtesy: தட்ஸ்தமிழ்

17 comments:

  1. நிறைய தகவல்கள் திரட்டி எழுதியிருக்கிறீர்கள், அவர்வர்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்து விடுகிறது, எளிய மக்களைத்தவிர!!

    ReplyDelete
  2. நல்ல தகவல் தொகுப்பு..... Interesting!

    ReplyDelete
  3. அட இதுலாம் நான் எழுதல ப்ரதர்... courtesy: தட்ஸ்தமிழ்னு போட்டிருக்கேனே படிக்கலையா... இதை பத்தி மேலும் தோண்டுனதுல இன்னும் பல தகவல்கள் கிடைத்தது... அதாகப்பட்டது.... இந்த விஷயத்த முதன் முதலில் கண்டு புடிச்சது அமேரிக்கா இல்லையாம்... சோவியத் ஜியாலகிஸ்டுகள் 80 -களில் இந்த கனிம வளங்களை கண்டறிந்து மேப்பிங் செய்து வெச்சுட்டு அப்போதைய ஆக்கிரமிப்பை விளக்கிகொண்டார்கலாம்... அதன்பிறகு ஆக்கிரமித்த அமேரிக்கா, 2005 ல் அவர்களின் மேப்பிங்கை ஆப்கானின் ஒரு அரசு அலுவகத்தில் கண்ட அமெரிக்க படை 2006 -ல் சர்வே செய்து பார்த்து தாங்கள் கண்டு புடித்ததாக இப்போது பீத்தி கொள்கிறார்கள் என்கிற உண்மையும் வெளியாகி இருக்கிறது.... எது எப்படியோ.... அடுத்தவன் சொத்துக்கு அலையுற அல்ப நாடுகள் வரிஞ்சு கட்டிக்கிட்டு வரிசைல நிக்குதாம் இப்போ.... என்னத்த சொல்றது...

    ReplyDelete
  4. //Chitra said...
    நல்ல தகவல் தொகுப்பு..... Interesting!//

    நன்றி சகோ.சித்ரா... என்ன இது கண்ணாடி...? ஹ ஹ :-) இந்த சைஸ் போதுமா?!?!? ;-p

    ReplyDelete
  5. செய்தியில் சுட்டதுங்க்ரதாள இதன் உண்மை தன்மை மாறாமல் இருக்க என் சொந்த கருத்துக்களை இதில் புகுத்தாமல் அப்படியே பப்ளிஷ் செய்துள்ளேன்... மேலும் பல தகவல்கள் பின்னூட்டத்தின் மூலம் பகிர்ந்து கொள்ளலாம் என்பதால்...

    ReplyDelete
  6. பின்ன... சோழியும் குடுமியும் சும்மா ஆடுமா சார்...

    ReplyDelete
  7. என்ன ஆட்டம் ஆடினாலும் இறைவன் அடக்க ஒரு சில மணி துளிகள் போதும்.... உதாரணம் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் சமீபத்திய நிலை... இதுல ஒன்னு கவனிச்சிங்களா எங்கையெல்லாம் ஒரு குரூப்பா போயி இவனுங்க அப்பாவி மக்களை கொன்று குவிச்சானுங்களோ அந்த க்ரூப்ல இருந்த எல்லாருக்குமே பெரிய பெரிய தலைவலியா வந்துகிட்டு இருக்கு...முதலில் எகனாமிகல் கிரிசிஸ், இப்போ எண்ணெய் கிணறு புட்டுகிச்சு.... இன்னும் என்னன்ன நடக்குமோ....

    ReplyDelete
  8. என்ன நடக்குமோ தெரியல...!!பார்க்கலாம்

    ReplyDelete
  9. //ஜெய்லானி said...
    என்ன நடக்குமோ தெரியல...!!பார்க்கலாம்//

    பாக்க மட்டும் தான் முடியும் சகோ... அதிகபட்சமாக பிரார்த்திக்கலாம்... வேறென்ன செய்றது... இதற்கு மேலும் ஒரு போர் இப்பூவுலகம் தாங்காது... எல்லோரும் நலமாக வாழ இறைவன் நேர்வழி காட்டுவானாக....

    ReplyDelete
  10. //தேவையான முதலீடு கிடைத்தால், அடுத்த சில வருடங்களிலேயே ஆப்கன் நாடு உலகின் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் அதிசயத்தைப் பார்க்கத்தான் போகிறீர்கள் என்கிறது அமெரிக்கா.//

    இத நாங்க நம்பணுமாக்கும்??!! அட ஏங்க காதுல பூ சுத்திகிட்டு??!! ஈராக்ல உயிர்கொல்லி ஆயுதங்கள் இருக்குன்னு சொல்லிட்டு நுழைஞ்சு, பெட்ரோல உறிஞ்சுகிட்டிருக்க மாதிரி, இப்ப ஆஃப்கன், அவ்ளோதான்!!

    (அப்றம், காப்பி-பேஸ்ட்னாலும், நல்ல தகவல்கள் இந்த மாதிரி தாங்க!!)

    ReplyDelete
  11. //ஹுஸைனம்மா said... இத நாங்க நம்பணுமாக்கும்??!! அட ஏங்க காதுல பூ சுத்திகிட்டு??!! ஈராக்ல உயிர்கொல்லி ஆயுதங்கள் இருக்குன்னு சொல்லிட்டு நுழைஞ்சு, பெட்ரோல உறிஞ்சுகிட்டிருக்க மாதிரி, இப்ப ஆஃப்கன், அவ்ளோதான்!!//

    என்னடா அடண்டன்சுல ஒரு ஆளு குறையுதேன்னு பாத்தேன்... வாங்க வாங்க ஹுஸைனம்மா...


    நீங்க சொன்னதுல ஒரு சின்ன திருத்தம்... அப்போ இராக்கு இப்போ ஆப்கன் இல்ல..... ஆப்கானுக்கு பிறகு தான் இராக்... தாலிபான் ஒழிப்புன்னு முதலில் இறங்கியது ஆப்கனில் தான்... பிறகு தான் வெபன் ஆப் மாஸ் டிஸ்ட்ரக்சன் (WMD) வைத்திருக்கிரார்கல்னு சொல்லி இராக்கை தாக்கியது.... எது எப்படியோ... எவன் வீட்டு சொத்தையாவதும் ஆட்டைய போட எண்ணிய அமெரிக்காவுக்கு கிடச்ச நல்ல செய்தி இது... ஆனால் சீனா சைக்கில் கேப்பில் புல்டோவ்சர் விட்டு கனிம புதையலை நோன்டிருவாய்ங்லோனு கலக்கத்தில் இருக்குதாம் அமேரிக்கா.... என்ன கொடும சார் இது...

    ReplyDelete
  12. //மங்குனி அமைச்சர் said...
    நல்ல தகவல்கள் //

    Thanks mangu....

    ReplyDelete
  13. என்னதான் இருந்தாலும் உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்ல பங்காளிங்களா... நான் அப்பப்ப ஆப்சண்டு ஆனாலும் மறக்காம எனக்கு விருது குடுக்கும் பாசக்கார பங்களிங்கள நினைக்கும்போது :-)...

    நன்றி சகோ. ஜெய்லானி

    ReplyDelete
  14. இப்படிப்பட்ட புதையல்கள் புதைந்து கிடக்கும் பூமிக்கு சொந்தக்கார நாடுகளின் அரசியல் அமைப்பும்,சட்டதிட்டங்களும்,படிப்பறிவின்மையும் அந்த நாடுகளை முன்னேறவிடாமல் தடுக்கின்றது என்பதும் வருத்தத்தக்க விடயம்

    ReplyDelete
  15. நல்ல பதிவு நன்றி

    ReplyDelete
  16. நல்ல பதிவு நன்றி
    இவன்
    http://tamilcinemablog.com/

    ReplyDelete

வைறது, வாழ்த்துரதுலாம் இங்க தான்....
Come On.. Start Music...