Saturday, November 20, 2010
Monday, July 5, 2010
புதையல் செய்தி!!!!
ஆப்கானில் மண்ணுக்கடியில் புதைந்து கிடக்கும் கனிம புதையல் பற்றி போன பதிவு போட்டு மிக குறுகிய காலத்துக்குள் இன்னொரு புதையல் செய்தி...
ஆனால் இம்முறை இது கைக்கு எட்டும் தொலைவில் இருப்பது என்பது கூடுதல் சுவையான செய்தி.... விஷயம் உறுதி ஆகிருச்சு.... இந்த புதையல் வேற எங்கயும் இல்ல நம்ம நாட்டுல அதுவும் நம் தமிழ் நாட்டுல.... இந்த ரகசியம் நமகுல்லையே இருக்கட்டும் சொந்தகார பங்காளிங்களா.... வெளில சொல்லிராதீங்க... ;-)
இந்தியாவிலேயே முதல் முறையாக பிளாட்டினம் கனிமப்படிவங்கள் தமிழகத்தின் கோவை, நாமக்கல் மாவட்டங்களில் அபரிமிதமான அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுடன் இணைந்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
இதுதொடர்பான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று சென்னையில் கையெழுத்தானது.
சென்னை கோட்டையில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அவரது அறையில் நடைபெற்ற இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கொல்கத்தாவில் உள்ள இந்திய புவியியல் ஆய்வுத்துறை டைரக்டர் ஜெனரல் என்.கே.தத்தா, தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர் க.மணிவாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அப்போது, சட்ட அமைச்சர் துரைமுருகன், சுரங்கத் துறை செயலாளர் சாந்தா ஷீலா நாயர், தமிழக தொழில்துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நிதித்துறை முதன்மை செயலாளர் சண்முகம், தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் பொதுமேலாளர் வி.மனோகரன் தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் தங்க கலியபெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் இதுகுறித்து சாந்த ஷீலா நாயர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் கடந்த 2,3 ஆண்டுகளாக பிளாட்டினம் கனிமத்தை கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு கனிம நிறுவனத்துக்கு, இந்திய புவியியல் துறை இப்பணியில் உதவி வருகிறது. இதில், நாமக்கல் மாவட்டம் சத்தம்பூண்டியிலும், மேட்டுப்பாளையத்திலும் பிளாட்டினம் படிமங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் மிக அதிக அளவில் இருப்பது தெரியவந்துள்ளது.
சத்தம்பூண்டி பகுதியில் 27 சதுர கி.மீ. பரப்புக்கு பிளாட்டினம் இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோல், மேட்டுப்பாளையம் பகுதியில் 5 சதுர கி.மீ. பகுதியில் பிளாட்டினம் உள்ளது. ஆனால், இன்னும் 150 கி.மீ. பகுதியில் பிளாட்டினம் உள்ளது.
தற்போது, 30 மீட்டர் ஆழம் மட்டுமே தோண்டியுள்ளோம். இன்னும் 200 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை தோண்டும்போது மிக அதிக அளவில் பிளாட்டினம் கிடைக்கக்கூடும். உலகில் தற்போது, தென்னாப்பிரிக்காவில்தான் அதிக அளவில் பிளாட்டினம் வெட்டியெடுக்கப்படுகிறது. உலகில் கிடைக்கும் 100 சதவீத பிளாட்டினத்தில் 70 சதவீதம் தென்னாப்பிரிக்காவில்தான் கிடைக்கிறது.
இந்தியாவில் ஒரிசாவில் மட்டும் ஓரளவு பிளாட்டினம் கிடைத்து வருகிறது. ஆனால், தமிழகத்தில்தான் முதல்முறையாக மிக அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் தமிழகத்தையே சேரும்.
மத்திய அரசு, பிளாட்டினம் கண்டறிவதில் உதவி மட்டுமே அளிக்கும். பிளாட்டினம் இருக்கும் இடங்களில் கனிமத்தை வெட்டியெடுப்பதில் தனியாரை ஈடுபடுத்துவது, அதை விற்பனை செய்வது என அனைத்திலுமே தமிழக அரசுதான் முழுபங்கு வகிக்கும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் இப்போது கிடையாது. இன்னும் அந்த அளவுக்கு பணிகள் செல்லவில்லை என்றார்.
Courtesy: தட்ஸ்தமிழ்
அப்போ கோவை ஜில்லா அதுவும் நாமக்கலை சேர்ந்த சொந்த கார பங்காளிங்க எல்லாம் இந்த செய்தி தெரிஞ்சு படு குஷில இருப்பீங்க.... நிலத்தொட விலை எங்கையோ போ போது...
ஆனால் இதற்காக விவசாய விலை நிலங்கள் கையாக படுத்தப்பட்டால் வேளாண்மைக்கு பங்கம் வந்து உணவு உற்பத்தி பாதிக்க படுமே என்கிற கவலை இப்போதே எழுந்துவிட்டது.... ஒன்றை பெற இன்னொன்றை இழக்கவேண்டும் என்ற நியதிக்கு மாற்று நியதியே இல்லையா.... கோடி கோடியாய் பணம் கொட்டினாலும் காய்ந்து கிடந்தாள் கால் வயிற்றுக்கென்னவோ தேவை கஞ்சி மட்டும் தான்...
பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல்.... அரசு அனைத்தையும் கவனத்தில் கொண்டால் நலம்....
ஆனால் இம்முறை இது கைக்கு எட்டும் தொலைவில் இருப்பது என்பது கூடுதல் சுவையான செய்தி.... விஷயம் உறுதி ஆகிருச்சு.... இந்த புதையல் வேற எங்கயும் இல்ல நம்ம நாட்டுல அதுவும் நம் தமிழ் நாட்டுல.... இந்த ரகசியம் நமகுல்லையே இருக்கட்டும் சொந்தகார பங்காளிங்களா.... வெளில சொல்லிராதீங்க... ;-)
இந்தியாவிலேயே முதல் முறையாக பிளாட்டினம் கனிமப்படிவங்கள் தமிழகத்தின் கோவை, நாமக்கல் மாவட்டங்களில் அபரிமிதமான அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுடன் இணைந்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
இதுதொடர்பான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று சென்னையில் கையெழுத்தானது.
சென்னை கோட்டையில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அவரது அறையில் நடைபெற்ற இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கொல்கத்தாவில் உள்ள இந்திய புவியியல் ஆய்வுத்துறை டைரக்டர் ஜெனரல் என்.கே.தத்தா, தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர் க.மணிவாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அப்போது, சட்ட அமைச்சர் துரைமுருகன், சுரங்கத் துறை செயலாளர் சாந்தா ஷீலா நாயர், தமிழக தொழில்துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நிதித்துறை முதன்மை செயலாளர் சண்முகம், தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் பொதுமேலாளர் வி.மனோகரன் தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் தங்க கலியபெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் இதுகுறித்து சாந்த ஷீலா நாயர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் கடந்த 2,3 ஆண்டுகளாக பிளாட்டினம் கனிமத்தை கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு கனிம நிறுவனத்துக்கு, இந்திய புவியியல் துறை இப்பணியில் உதவி வருகிறது. இதில், நாமக்கல் மாவட்டம் சத்தம்பூண்டியிலும், மேட்டுப்பாளையத்திலும் பிளாட்டினம் படிமங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் மிக அதிக அளவில் இருப்பது தெரியவந்துள்ளது.
சத்தம்பூண்டி பகுதியில் 27 சதுர கி.மீ. பரப்புக்கு பிளாட்டினம் இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோல், மேட்டுப்பாளையம் பகுதியில் 5 சதுர கி.மீ. பகுதியில் பிளாட்டினம் உள்ளது. ஆனால், இன்னும் 150 கி.மீ. பகுதியில் பிளாட்டினம் உள்ளது.
தற்போது, 30 மீட்டர் ஆழம் மட்டுமே தோண்டியுள்ளோம். இன்னும் 200 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை தோண்டும்போது மிக அதிக அளவில் பிளாட்டினம் கிடைக்கக்கூடும். உலகில் தற்போது, தென்னாப்பிரிக்காவில்தான் அதிக அளவில் பிளாட்டினம் வெட்டியெடுக்கப்படுகிறது. உலகில் கிடைக்கும் 100 சதவீத பிளாட்டினத்தில் 70 சதவீதம் தென்னாப்பிரிக்காவில்தான் கிடைக்கிறது.
இந்தியாவில் ஒரிசாவில் மட்டும் ஓரளவு பிளாட்டினம் கிடைத்து வருகிறது. ஆனால், தமிழகத்தில்தான் முதல்முறையாக மிக அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் தமிழகத்தையே சேரும்.
மத்திய அரசு, பிளாட்டினம் கண்டறிவதில் உதவி மட்டுமே அளிக்கும். பிளாட்டினம் இருக்கும் இடங்களில் கனிமத்தை வெட்டியெடுப்பதில் தனியாரை ஈடுபடுத்துவது, அதை விற்பனை செய்வது என அனைத்திலுமே தமிழக அரசுதான் முழுபங்கு வகிக்கும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் இப்போது கிடையாது. இன்னும் அந்த அளவுக்கு பணிகள் செல்லவில்லை என்றார்.
Courtesy: தட்ஸ்தமிழ்
அப்போ கோவை ஜில்லா அதுவும் நாமக்கலை சேர்ந்த சொந்த கார பங்காளிங்க எல்லாம் இந்த செய்தி தெரிஞ்சு படு குஷில இருப்பீங்க.... நிலத்தொட விலை எங்கையோ போ போது...
ஆனால் இதற்காக விவசாய விலை நிலங்கள் கையாக படுத்தப்பட்டால் வேளாண்மைக்கு பங்கம் வந்து உணவு உற்பத்தி பாதிக்க படுமே என்கிற கவலை இப்போதே எழுந்துவிட்டது.... ஒன்றை பெற இன்னொன்றை இழக்கவேண்டும் என்ற நியதிக்கு மாற்று நியதியே இல்லையா.... கோடி கோடியாய் பணம் கொட்டினாலும் காய்ந்து கிடந்தாள் கால் வயிற்றுக்கென்னவோ தேவை கஞ்சி மட்டும் தான்...
பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல்.... அரசு அனைத்தையும் கவனத்தில் கொண்டால் நலம்....
Wednesday, June 16, 2010
செய்தி தெரியுமா!?!?!??!?
உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான். அமெரிக்காவின் முயற்சியால் கண்டறியப்பட்டுள்ள இதன் மதிப்பு மட்டும் 1 ட்ரில்லியன் டாலர்கள் என முதல் நிலைத் தகவல்கள் கூறுகின்றன. முழுமையான விவரங்கள் வந்தால் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை நிமிர்த்தும் பெரும் புதையல் இது என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள்.
இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் 'ஸ்மெல் பண்ணவர்கள்' அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையான பெண்டகன் தான்.
போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை நிமிர்த்தும் பெரும் புதையல் இது என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள்.
இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் 'ஸ்மெல் பண்ணவர்கள்' அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையான பெண்டகன் தான்.
இந்தக் கனிமங்கள் தவிர, தொழில்துறையின் அடிப்படையை உருவாக்கத் தேவையான அத்தனை தாதுக்களையும் பேரளவில் கண்டுபிடித்துள்ளனர்.
(மக்களே... இப்போ புரியுதா இந்த போர் எதுக்குன்னு... அமெரிக்கா எது பண்ணாலும் அதுல ஒரு உள்குத்து இருகுமப்பா )
(மக்களே... இப்போ புரியுதா இந்த போர் எதுக்குன்னு... அமெரிக்கா எது பண்ணாலும் அதுல ஒரு உள்குத்து இருகுமப்பா )
இப்படியொரு தாதுப் படுகை, பெரும் பொக்கிஷம் தங்கள் நாட்டில் இருப்பதே தெரியாமல் போரிலும் மதத் தீவிரவாதத்திலும் காலத்தைக் கழித்து வந்துள்ளனர் ஆப்கன் ஆட்சியாளர்கள். இப்போதும் கூட தாதுப் புதையலின் ஒரு பகுதிதான் ஆப்கன் அரசுக்கு சொல்லப்பட்டுள்ளது. மீதி விவரங்களை அமெரிக்கா ரகசியமாக வைத்துள்ளது.
ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படுகை கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் கூட ஆப்கன் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் எங்கேயோ போய்விட்டிருக்கும்.
'இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. உலகின் மிகப் பெரிய சுரங்க மையமாக இனி ஆப்கானிஸ்தான் திகழும்' என்கிறார் ஒரு அதிகாரி. லித்தியம் கனிமத்துக்கு ஒட்டுமொத்த இருப்பிடமாகத் திகழும் அளவுக்கு ஆப்கானிஸ்தானி்ல் இருப்பு காணப்படுகிறதாம்.
இப்போது லித்தியம் உற்பத்தியில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. அதை ஜஸ்ட் லைக் தட் ஓவர்டேக் செய்துவிடும் ஆப்கானிஸ்தான் என்கிறார்கள்.
ஆனால் இந்த கனிமங்களை தோண்டி எடுக்க பெரும் முதலீடு அவசியமாக உள்ளது. தேவையான முதலீடு கிடைத்தால், அடுத்த சில வருடங்களிலேயே ஆப்கன் நாடு உலகின் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் அதிசயத்தைப் பார்க்கத்தான் போகிறீர்கள் என்கிறது அமெரிக்கா.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மத்திய பாதுகாப்பு கமாண்டர் ஜெனரல் டேவிட் எச் பெட்ரோஸ் இதுகுறித்து கூறுகையில்,
"ஆப்கானிஸ்தானில் இப்போது கண்டறிந்துள்ள தாதுக்களின் அளவு, வெரைட்டி, தரம் என்னை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. ஆனால் இதைத் தோண்டி எடுப்பது, பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் புரியாமலில்லை. ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷம் பெரிய விஷயம்.
மாபெரும் தொழிற்சாலைகள் அமைந்து, ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் தருணம் நெருங்கிவிட்டதால், ஆப்கானிஸ்தான் பற்றிய இமேஜே சட்டென்று மாறும் என்றார்.
இந்த கனிமப் புதையலில் மதிப்பு என்ன?:
அதைத் தெரிந்து கொள்ளும் முன், ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் எவ்வளவு என்று பார்க்கலாம்.
இந்த நாட்டின் பொருளாதாரம் பெருமளவு சார்ந்திருப்பது... விவசாயத்தையோ, தொழிற்சாலைகளையோ அல்ல. ஓப்பியம் மற்றும் அபின் தயாரிப்பை!
சர்வதேச அளஷவில் கொடிய போதைப் பொருள்கள் அனைத்துக்கும் தாயகமாகத் திகழ்கிறது ஆப்கானிஸ்தான். மேற்கு ஆசியாவின் போதை மருந்து முக்கோணத்தின் மையப் பகுதி ஆப்கானிஸ்தான். இன்று நேற்றல்ல...பண்டைய காலத்திலிருந்தே ஓப்பியம் தயாரிப்பது ஆப்கானிஸ்தானில் குடிசைத் தொழில் மாதிரி.
இதற்கடுத்த வருவாய் ஆதாரம், முன்பு ரஷ்ய உதவி. இப்போது அமெரிக்கா தரும் நிதியுதவி.
இப்படி சகல வழிகளிலும் ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் அளவே 12 பில்லியன்கள்தான்! அதாவது இந்த 12 பில்லியன் டாலர்தான் ஆப்கானிஸ்தானின் ஜிடிபி (gross domestic production!). ஒரு சர்வதேச நடுத்தர ஐ.டி. நிறுவனத்தின் லாபத்தின் அளவும் இதுதான்.
ஆனால், கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிமத்தின் மதிப்பு 1 ட்ரில்லியன் டாலரைத் தாண்டும் என்கிறது ஆரம்பகட்ட கணக்கு. பில்லியன் கணக்கில் சொன்னால் 1000 பில்லியன் டாலர்கள். இன்றைய தேதிக்கு இந்தியாவின் ஜிடிபியே 1.23 ட்ரில்லியன்தான்!!.
இவ்வளவு பெரிய புதையலை எப்படிப் பயன்படுத்தப் போகிறது ஆப்கானிஸ்தான் என்பதுதான் இப்போது எழுந்துள்ள 'பில்லியன் டாலர் கேள்வி'!. அல்லது இதை அமெரிக்கா எப்படி மறைமுகமாக சுருட்டப் போகிறது என்பது தான் 'ட்ரில்லியன் டாலர் கேள்வி!'.
ஆப்கானிஸ்தானில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. மீண்டும் தலிபான்கள் தலைதூக்கும் நிலை. நாட்டின் ஒரு பகுதியில் இன்னும் தலிபான்களின் ஆதிக்கம் உள்ளது. இன்னொரு பக்கம் லஞ்சமும் நிர்வாகச் சீர்கேடும் ஆப்கானிஸ்தானையே விழுங்கிவிடும் சூழல் உள்ளது.
இந்த கனிமத் தாதின் ஒரு சிறு பகுதியை வெற்றிகரமாக வெளியில் எடுத்துப் பயன்படுத்தினாலே, நாடு பெருமளவு நிமிர்ந்துவிட வாய்ப்புள்ள நிலையில், இயற்கை அளித்துள்ள இந்த நற்கொடையை எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்களோ? என கவலை தெரிவித்துள்ளனர் பொருளியலறிஞர்கள்.
இந்த தாது விஷயத்தில் அமெரிக்கா எப்படியெல்லாம் ஆப்கானிஸ்தானில் விளையாடப் போகிறது என்பதும் முக்கியமான கேள்வியாக நிற்கிறது.
ஆனால் இந்த விஷயத்தில் அமெரிக்காவும் பயப்படும் சமாச்சாரம் ஒன்று அங்கே நிகழ்ந்து வருகிறது. அதுதான் சீனாவின் எதிர்பாராத தலையீடு. இந்த இயற்கைத் தாது புதையல் விஷயத்தில் உதவிக்கு வருகிறோம் என வரிந்து கொண்டு சீனா நுழைய ஆரம்பித்துவிட்டதை அச்சத்துடனே பார்க்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள்.
ஆப்கானிஸ்தானில் தாமிர தாது தோண்டியெடுக்கும் முழு உரிமையையும் சீனாவுக்கு தாரைவார்க்க ஆப்கன் அமைச்சர் ஒருவரே 30 மில்லியன் டாலர்கள் லஞ்சம் பெற்றுள்ளார். இன்னும் அவர் அமைச்சராகவே தொடர்வதும் அதை அதிபர் அமீத் கர்ஸாய் அனுமதிப்பதும், அமெரிக்கர்கள் பயத்தை அதிகரித்துள்ளது.
ஆனால், பெரும்பகுதி கனிமங்களை கண்டுபிடித்ததே அமெரிக்காதான் என்பதால் முன்னுரிமை அவர்களுக்கே தரப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.
அமெரிக்காவும் சீனாவும் இந்த கனிமங்கள் மீது ஆசைப் பார்வை பார்ப்பதைப் பார்த்தால், 'தேனெடுத்தவன் புறங்கையை நக்கிய கதையாகுமா அல்லது தேனையே எடுத்துக் கொண்டு வெறும் புறங்கையை மட்டும் ஆப்கன் மக்களுக்கு காட்டப் போகிறார்களா என்பது தெரியவில்லை.
கடந்த ஓரிரு வாரங்களில் தான் இந்த ஆப்கான் கனிம சமாச்சாரத்தை வெளியில் கசிய விட்டுள்ளது அமெரிக்கா.
'Unobtanium' என்ற கற்பனையான கனிமத்தை எடுக்க பண்டோரா கிரகத்தையே அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்து, அதன் மக்களை ஒழித்துக் கட்டும் கற்பனைக் கதையைத் தான் 'அவ்தார்' என்ற படமாக எடுத்தார் ஜேம்ஸ் கேமரூன். 3 டி சமாச்சாரம், அன்னிய கிரகவாசிகள் என்று கதை போனதால் கேமரூன் சொல்ல வந்த விஷயம் (கதையின் கரு ) பெரிதாகப் பேசப்படவில்லை.
இப்போது ஆப்கானிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிம வளம் கிட்டத்தட்ட பண்டோரா கிரக கதை மாதிரி ஆகிவிடுமோ என்ற அச்சம் இப்போதே பரவ ஆரம்பித்துவிட்டது.
REEL = REAL
Courtesy: தட்ஸ்தமிழ்
Sunday, May 23, 2010
GOOOOOOOOOOOOOOOOOGLE
ஹலோ... சொந்த கார பங்காளிங்களா.... ரொம்ப நாளா கடை திறக்கவே இல்ல.... எல்லோரும் நலமா இருப்பீங்கன்னு நம்பறேன்.... பெருசா வேலைய ஒன்னும் வெட்டி முறிக்கல.... இருந்தும் சோம்பேறித்தனம் தான் வேற ஒன்னும் இல்ல....எது எப்டியோ... உங்க பதிவுகள் அனைத்தும் ஒன்னு விடாம படிச்சுட்டு இருக்கேன்... ரொம்ப சிறப்பா தொடர்ந்துட்டு இருக்கீங்க.... சரி நம்ம மேட்டருக்கு வருவோம்....
புதுசா எதுவும் சொல்ல போறதில்ல.... இருந்தும் வந்ததுக்காக ஏதாது சொல்லிட்டு போனுமே அதான்...
எல்லாம் தெரிஞ்ச மேதாவி கேள்வி பட்டுருப்பீங்க..... யாரவது ஓவரா டகுல்பாசு வேலை காமிச்சா அவங்கள இப்புடி தான் சொல்வோம்.... ஆனா இந்த பட்டம் நம்ம கூகுளுக்கு தான் சரியா பொருந்தும்னு நினைக்கிறேன்.... இப்போலாம் யாருக்காவது ஏதாவது தெரிலனா போதும் ஒடனே கூக்ளிங் தான்.... சரி நாம தான் அப்டி இருக்கோம்னா எங்க வீட்டு வாண்டுங்க கூட ரைம்ஸ் தேடுறதுக்கு கூகுல் தான் முதல்ல ஓபன் பண்ணுறாங்க.... இப்போ தான் அஞ்சு வயசு.... ஆனா கேம்ஸ், ரைம்சுனு கூக்ளிங் விளாட்ட ஆரம்பிச்சுருச்சுங்க.....
இப்புடி எதுக்கெடுத்தாலும் கூகுளின் உதவியை நாடும் நாம.... பெரும்பாலும் கூகுல் உபயோகிப்பது வெறும் வெப் பேஜஸ் தேடுவதற்கு தான்.... ஆனால் கூகுளில் இன்னும் பல அறிய பயன்பாடுகள் புதைந்து கிடப்பதை சமீபத்திலே தான் கண்டேன்... அவற்றுள் சில....
மண்டைய உடைச்சுகிட்டு நின்னு கணக்கு வாத்தி கிட்ட மண்டைல நாலு குட்டு வாங்கி போட்ட கணக்கு பார்முலா முதல்... எப்பேர்பட்ட சிக்கலான கணக்குகளுக்கும் போர்முலாவுக்கும் உடனடி விடை.... மேலும் உங்களின் விமானம் குறித்த நேரத்தில் புறப்படுமா (On Schedule) என்பது உங்கள் விமான எண்ணை வைத்து தெரிந்து கொள்ளலாம்... அதுமட்டுமில்லாது அவற்றின் arrival நேரமும் தெரிந்து கொள்ளலாம்....
இது தவிர வெளிநாடுகளில் இருக்கும் நீங்கள் அன்றைய தேதியின் நம் நாட்டின் கரன்சி ரேட்டை உதாரணத்துக்கு நீங்கள் ஊருக்கு அனுப்ப விருக்கும் தொகை 50o ரியலாக இருந்தால் நம் நாட்டு பணத்தின் மொத்த மதிப்பை நொடியில் அறியலாம்... இது மட்டுமல்லாது..... கிலோ மீட்டரிலிருந்து மைலுக்கும்.... மீட்டரை சென்ட்டி மீட்டராக மாற்றவும் இதை உபயோகிக்கலாம்.....
மேல் சொன்ன அனைத்து பயன்பாடுகளும் உங்களில் பலருக்கோ அல்லது சிலருக்கோ இதற்கு முன்னரே தெரிந்திருக்கக்கூடும்.... இருந்தும் இதை எப்படி உபயோகிப்பது என்று சமீபத்தில் அறிந்து கொண்ட என்னை போன்றவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கக்கூடும்... சரி கீழே உள்ள வீடியோ செய்முறை விளக்கம் மூலம் உபயோகிக்கும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்....
இறைவனின் வரப்பிரசாதங்களில் இதுவும் ஒன்று.... கூகுளை உலகிற்கு முதலில் தந்த மகத்தான மனிதர்களான Sergey M. Brin , Lawrence E. Page இவர்களுக்கு நன்றி கூறிக்கொண்டு... கூகுளின் சேவையை மேலும் செம்மை படுத்திய பல மூளை கார பயபுல்லைகளுக்கும் இது மூலம் நன்றி தெருவித்து கொள்வதோடு அப்பீட்டு ஆகிகொல்வது உங்கள் அன்புத்தோழன்...
HAPPY GOOGLING....
மேல் சொன்ன அனைத்து பயன்பாடுகளும் உங்களில் பலருக்கோ அல்லது சிலருக்கோ இதற்கு முன்னரே தெரிந்திருக்கக்கூடும்.... இருந்தும் இதை எப்படி உபயோகிப்பது என்று சமீபத்தில் அறிந்து கொண்ட என்னை போன்றவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கக்கூடும்... சரி கீழே உள்ள வீடியோ செய்முறை விளக்கம் மூலம் உபயோகிக்கும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்....
இறைவனின் வரப்பிரசாதங்களில் இதுவும் ஒன்று.... கூகுளை உலகிற்கு முதலில் தந்த மகத்தான மனிதர்களான Sergey M. Brin , Lawrence E. Page இவர்களுக்கு நன்றி கூறிக்கொண்டு... கூகுளின் சேவையை மேலும் செம்மை படுத்திய பல மூளை கார பயபுல்லைகளுக்கும் இது மூலம் நன்றி தெருவித்து கொள்வதோடு அப்பீட்டு ஆகிகொல்வது உங்கள் அன்புத்தோழன்...
HAPPY GOOGLING....
Tin Tin Ti Din.... :-)
Subscribe to:
Posts (Atom)
